தமிழ்நாடு மாடர்ன் கபடி போட்டியின் தேசிய நடுவர்கள் தேர்வு
செய்தியாளர் மதன்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஓட்டலில் நடந்த இந்திய மாடர்ன் கபடி சங்கம் சார்பில் தேசிய அளவிலான நடுவர்கள் தேர்வு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் தமிழ்நாடு சேலம் மாடர்ன் கபடி சங்கத்தில் இருந்து பி.டி.பெருமாள், பி.டி.அண்ணாமலை, ஜெ.கண்ணன், ராஜேஷ்சர்மா, அ.ஆனந்த், ஜே.பி.ஐஸ்வர், மு.பார்த்திபன் ஆகியோர் தேசிய நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாடர்ன் கபடி சங்க தலைவர் த.மதன்குமார், பொதுச்செயலாளர் த .கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில், மாடர்ன் கபடி சங்க நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மாடர்ன் கபடி விளையாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் சிறந்த பங்களிப்பை நடுவர்கள் வழங்க வேண்டும். தேசிய அளவிலான நடுவர் தேர்வை சிறப்பாக நடத்திய டாக்டர் ராம் ரெட்டி, ஆனந்த் சாகு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.