மத்திய அரசின் தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள மாடு, எருமை உள்ளிட்ட அனைத்து கால்நடைகளின் காதுகளிலும் 12 இலக்க எண் கொண்ட டிஜிட்டல் டேக் பொருத்தப்பட உள்ளது. இந்த டேக் மூலம் கால்நடைகளின் இனம், பிறந்த தேதி, வயது, பாலினம், செயற்கை முறை கருவூட்டல் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் கால்நடை வளர்ப்பில் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.
மண்னை
க.மாரிமுத்து.