ஜே சிவகுமார் திருவாரூர் செய்தியாளர்
திருவாரூர் நகராட்சி விஜயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் குடவாசல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ சென்று ஆய்வு மேற்கொண்டார்
திருவாரூர் நகராட்சி விஜயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் குடவாசல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ சென்று ஆய்வு மேற்கொண்டார்
திருவாரூர் விஜயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு பெண்கள் மருத்துவ பகுதிஅறுவை சிகிச்சைக்குபின் கவனிக்கும் பிரிவு ஸ்கேன் அறை குழந்தைகள் நலப்பிரிவு அறுவை அரங்கு, மருத்து சீட்டு வழங்குமிடம் மற்றும் மருத்துவமனையின் மழைநீர் வடிகால் அமைப்பு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்
மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சேவை குறித்து கேட்டறிந்தார் மருத்துவமனை ஊழியர்களிடம் சிகிச்சை வரும் நபர்களுக்கு மேலான மருத்துவ சேவைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்
குடவாசல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துமனை அலுவலர்களிடம் கேட்டறிந்தார் போதுமான மருத்துகளை இருப்பு வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார் தொடர்ந்து குடவாசலில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து குடவாசல் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவியிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்டார்
நிகழ்வின்போது திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா முதுநிலை குடிமுறை மருத்துவர் அலுவலர் மருத்துவர் ஜெயகுமாரி வட்டாட்சியர்கள் திருவாரூர் நக்கீரன் குடவாசல் குருநாதன் மருத்துவர்கள்மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்