தற்போதுள்ள வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் தமிழகத்தை இரண்டாக பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
ராமநவமித்திருநாள், பகவான் ஸ்ரீராமன் அவதரித்த இந்த நாளை முன்னிட்டு துத்துக்குடியில் உள்ள பெருமாள் கோவிலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்தார்.பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், தூத்துக்குடியில் வரும் 1,2 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் சனாதன இந்து தர்ம மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிக்கு காவல்துறை, தமிழக அரசு தடை செய்துள்ளது. சனாதன இந்து தர்ம மாநாடு இங்கு(தூத்துக்குடி) நடைபெறுவது என்பது ஒரு நல்ல நோக்கத்திற்காக, ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இந்து அமைப்புகள் இங்கே மாநாடு நடத்தக்கூடாது என்று சொல்லி வெவ்வேறு காரணங்களை சொல்லுகிறார்கள்.
ஏற்கனவே சனாதன இந்து தர்ம மாநாடு நடத்தி இருக்கின்றோம். பேரணி, பொதுக்கூட்டமானது, எந்த விதமான பிரச்னையும் இல்லாமல் நடத்தி இருக்கின்றோம். ஆனால் வேண்டுமென்று இந்து மக்கள் கட்சியினுடைய மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு மட்டும் தடை விதித்திருப்பது ஒட்டுமொத்த இந்துக்களுக்கு இழைத்திருக்கின்ற அநீதி, இந்த மாநாட்டில் மிக முக்கியமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயம் தென் மாவட்டங்கள் கல்வி தொழில், வேலைவாய்ப்பு ஆகியவை உள்ளடக்கியது.மேலும், தனி மாநிலம் உருவானால் அரசாங்கத்தினுடைய கவனம் முதலமைச்சர் எளிமையாக சந்திக்கக்கூடிய வாய்ப்பு, நிர்வாகம் இதெல்லாம் ஒரு சீர்திருத்த நடவடிக்கைகள் அதனால் தனி மாநில கோரிக்கை என்பது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையிலே இங்கு எழுப்பப்படுகிறது.

தூத்துக்குடியில் ஆறு வழிச்சாலை திட்டம், அதே போன்று விருதுநகரில் ஜவுளி பூங்கா, பிரைம் மினிஸ்டர் ஸ்ரீ என்ற பள்ளிகள் நாடு முழுக்க 9,000 பள்ளிக்கூடங்களை தேர்ந்தெடுத்து கல்வித்தரத்தை மேம்படுத்த மாணவர்களுக்கு இலவசமாக அப்பள்ளிக்கூடத்தில் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறார்கள்.
இத்திட்டம், தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு ஏற்கனவே நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு, தமிழ்நாட்டில் தரம் உயர்த்துவதற்காக குறிப்பாக தென்தமிழ் நாட்டை தரம் உயர்த்துவதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார். துறைமுகத்திட்டம், மின் உற்பத்தி திட்டம், சாலைகள் அமைக்கும் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம், இது போன்று பல திட்டங்களை கொண்டு வந்தாலும் மோடி எதிர்ப்பு என்கின்ற ஒற்றைப் புள்ளியில் கிறிஸ்தவ மிஷனரிகள், கம்யூனிஸ்டுகள், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து இந்த தென் மாவட்டங்கள் வளர்ச்சியை தடுத்து வருகிறார்கள்.
எனவே கல்வி, தொழில் வாய்ப்புகளில் பின் தங்கி இருக்கக்கூடிய தென் மாவட்டங்கள் ஒருங்கிணைத்து தனி மாநிலமாக உருவாக வேண்டும். அதோடு மட்டுமல்ல தென் மாவட்டத்தில் வெகு வேகமாக இந்து தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மை ஆகிவிட்டார்கள். இந்துக்கள் மதமாற்றம் அதிகரித்து வருகிறது.
நிர்வாக வசதிக்காக புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும். 100 சட்டமன்றத் தொகுதி என்றால் ஒரு மாநிலம் உருவாகும். இப்போது பாண்டிச்சேரி ஒரு சிறிய மாநிலம், உத்திரபிரதேசத்தைபி பிரித்தால் உத்தரகன் மாநிலம் உருவாக்கப்பட்டது. பீகார் பிரித்து ஜார்கண்ட் உருவாக்கப்பட்டது. தெலுங்கானா உருவாக்கப்பட்டது. மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கொங்கு மாநிலம் உருவானால் இன்னும் நன்றாக வளர்ச்சி அடையும் என்று கூறினார்.பேட்டியின் போது இந்து மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வசந்த் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *