கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு பயன்படகாகூடிய வளர்ச்சிப் பணிகளை செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யூ.சி சங்க பொதுச்செயலாளர் மோகன் தலைமையில் ஐ.என்.டி.யூ.சி பொதுச்செயலாளர் யூ.கருப்பையா முன்னிலையில் இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பணி நிரந்தரம் செய்யவேண்டும் அதோடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகியவற்றை பணிமுடித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும், தொழில்வரி பிடித்தம் செய்துவரும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் தேவையான பணிகளை நகராட்சி மூலம் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்