இளைஞர்களுக்கான போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியற்ஒளஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பங்கேற்பு
தமிழக காவல்துறை மற்றும் மணலி காவல் நிலையம் மற்றும் சிபிசிஎல் நிறுவனம் இணைந்து நடத்தும் போதை மற்றும் போதைப் பொருட்களின் தடை செய்ய வலியுறுத்தியும் இளைஞர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் ஆவடி காவல் இணை ஆணையர் சிவகுமார் மற்றும் மாதவரம் துணை ஆணையர் பாலாஜி உதவி ஆணையர் விவேக் கண்ணன் ஆய்வாளர்கள் முத்துராமன் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்டூர் அறிவுரை வழங்கி உறுதிமொழி எடுத்துக் கொண்டு மாரத்தான் போட்டியை மாத்தூரில் கொடி அசைத்து துவக்கினார்
ஐந்து கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் மணலி நெடுஞ்சாலை வழியாக சிபிசிஎல் நிறுவனம் அருகே முடிவடைந்தது
இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு என பரிசு கோப்பை கேடயம் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது