ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் அருகே உள்ள வாணி யாறு அணையில் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் வெளிநாடு வாழ் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு அவர்கள் தலைமையில் அயலாக தமிழர் நல்வாழ்வுத்துறை இயக்குனர்.சதீஷ் இ.ஆ.ப மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்
மேலும் வானியாறு அணை முகாமினை பார்வையிட்டு முகாமில் வசிப்பவர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டனர்.அங்கு வசிக்கும் மக்கள் எங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வேண்டாம் தனிநபர் தொகுப்பு வீடுகள் வேண்டும் என்று அமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர் மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக முதல்வர் அவர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்தார் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்