வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்
சிஎன்ஐ பாக்ஸ் கிரிக்கெட் சீசன்-2 போட்டி திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள அழகர் டர்ப் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இறுதிப் போட்டியில்
சிஎன்ஐ அணியினர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தனர். இதில் 45 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை நிர்ணயித்தனர். தொடர்ந்து ஆடிய ரோட்டரி கிளப் ஆப் கிங் டவுன் 46 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை செட்டிநாடு கான்ஸ்டன்டைன் ரவி தியாகராஜன், பிஎஸ்என்ஏ கல்லூரி டிரஸ்டி சூர்யா ரகுராம், ஜி.டி.என் கல்லூரி தாளாளர் ரெத்தினம், சஎன்ஐ மண்டல இயக்குனர் கோபிசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை அமைப்பு தலைவர் அருள் ஞானபிரகாசம், செயலாளர் வினோத் ராஜதுரை ஆகியோர் செய்திருந்தனர்.