திருத்துறைப்பூண்டி., ஜூன்.30
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் ராயநல்லூர் கடை வீதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றுள்ளனர்.
இதனை பின்னால் வந்த நபர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பள்ளி படிக்கும் மாணவர்களுடைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு இருசக்கர வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது.
மேலும் அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இதே போன்ற செயலில் ஈடுபடுத்தக் கூடாது என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர் விடுத்துள்ளனர்.