மன்னார்குடி., ஜூலை.06

தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில் தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு பாஜகவினர் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாஜக நிர்வாகி ஒருவர் சாட்டையில் அடித்துக்கொண்டு விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *