தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாமில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 முன்னிட்டு முதற் கட்டமாக நடைபெற்று வரும் சுய கணக்கெடுப்பு விவரங்களை பொதுமக்கள் se.cenusus.gov.in.என்ற இணையதளத்தில் தாங்களாகவே பதிவேற்றம் செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. வைத்திநாதன் பார்வையிட்டார்

உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் க. சபரி ஐங்கரன் நகராட்சி ஆணையாளர் செல்வி எஸ் பார்கவி பொறியாளர் வி குணசேகரன் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் நகராட்சி மேலாளர்கள் முனிராஜ் ஜெயந்தி சுகாதார அலுவலர் செபஸ்டின் உள்ளிட்ட நகராட்சி அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *