தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் அறிவுறுத்தலின்படி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அம்சா ஆகியோர் உத்தரவின்படி பேரூராட்சி மன்ற தலைவர் சு. திருப்பதி போடி மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் கண்மாய் கரையில் பசுமையை போற்றும் விதமாக 200 பனை விதைகளை நட்டு வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ துணைத் தலைவர் சி கருப்பையா உள்ளிட்ட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஊர் பொதுமக்கள் இயற்கை ஆர்வலர்கள் பலர் உடன் இருந்தனர்