குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் திருவிழா பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் முழுவதும் 5 சனிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறும் திண்டுக்கல் மதுரை தேனி உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் ஆடி மூன்றாம் சனிக்கிழமை யொட்டி குச்சனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் நீர்மோர் பந்தல் அமைத்து காலை முதல் மாலை வரை தொடர்ந்து பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார் உடன் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்