வடலூர், ஆக. 12 –
வடலூர் பஸ் நிலையத்தில் அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்றகழகத்தின் சார்பில்,தினக்கூலி தொழிலாளிகளுக்கு இலவச வீட்டு மனை மற்றும் வீடு வழங்க வேண்டும், அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடக் கோரியும், வடலூர் நகராட்சி பஸ் நிலையத்தில் நான்கு முனையிலும் குடிநீர் தொட்டி அமைக்க கோரியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தலைவர் தங்கசிகாமணி தலைமையில் நடைபெற்றது. அமைப்பின் மாநில துணைத்தலைவர் தங்கப்பழம், செயலாளர் கவிஞர் ராஜபிரபா, மாவட்ட செயலாளர் பிரகாஷ், உட்பட பலர் கலந்துகொண்டனர்