S. செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்
9385856800
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பாறை வெடிப்பு (Glacier burst) காரணமாக, பீகார் மாநிலத்தில் கடுமையான வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்பொழுது, நிலைமையைக் கையாள்வதற்கு மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மாநில அரசுக்கு வழங்கும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும், வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உடனடியாகத் திரட்டப்பட்டு வருவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.