தூத்துக்குடி தாமோதரன் நகர் மெயின் ரோடு செல்வ விநாயகர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இளைஞர் அணி சார்பில் எம் ஜே கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் முருகேசன் நாடார் இரண்டாம் ஆண்டு நினைவு கோப்பை காண கபடி போட்டி வெள்ளிக்கிழமை துவங்கியது.
இரண்டாம் நாள் கபடி போட்டியை மாநகராட்சி மேயர் ஜெகன் துவக்கி வைத்தார். முன்னதாக மாநகராட்சி மேயர் ஜெகனை கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்றனர். பின்னர் கோவிலில் மேயர் ஜெகன் சாமி கும்பிட்டார். அதன் பிறகு விளையாட்டு வீரர்கள் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன் பிறகு இரண்டாம் நாள் கபடி போட்டி மேயர் ஜெகன் துவக்கி வைத்தது அடுத்து போட்டி ஆரம்பமானது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகி அந்தோணி ராஜ். மாமன்ற உறுப்பினர்கள் பாப்பாத்தி. சுரேஷ்குமார். முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன். முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோட்டு ராஜா. சி எஸ் ராஜா. ராமர். பேச்சிமுத்து. ஏசுவடியான். கபடி கந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் காலரில் பொதுமக்கள் அமர்ந்த கபடி போட்டியில் கண்டுகளித்தனர். முதல் போட்டியில் சாய் சென்னை அணியும். திருச்சி ஆதவன் அனிமோதியது. போட்டியில் சென்னை சாய் அணி 42 புள்ளியும். திருச்சி ஆதவன் அணி 18 புள்ளியும் பெற்றது போட்டியில் சென்னை சாய் அணி வெற்றி பெற்றது. இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.