மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி செப்டம்பர் 1 –
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் அவர்களின் 311-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை .சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு வி.கே. ராஜீவ் ,மாவட்ட ஆட்சியர் .ரஞ்ஜீத் சிங்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சு. அசோக் குமார், த.கா.ப. ஆகியோர் நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்கு அரசு சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் நியாஸ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .