தந்தை பெரியார் 148 வது பிறந்த நாள் பெருவிழா தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் அனுசரித்தனர். மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஆதித்தமிழர் பேரவை மதுரை வடக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தஜோதி தலைமையில் மலர் மாலை செலுத்திபுகழ் வணக்க செலுத்தினர்.
இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரு.தலித்ராஜா,மாநில கலை இலக்கிய அணிச் செயலாளர் செல்வம்இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அதியவன்,தெற்கு மாநகர் மாவட்ட செயலாளர் செல்வக்குமார்,கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் நீதிவேந்தன்,மகளிர் அணி பொறுப்பாளர்கள் இராணி,விஜயா,உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய மற்றும் மகளிர் அணியினர் உட்பட சுமார் 25 க்கும் மேற்பட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார் சிலைக்கு புகழ் வணக்க மரியாதை செய்தனர்.