முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை


தூத்துக்குடி நெல்லை தூத்துக்குடி ஓருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றி மறைந்த கே.வி.கே. சாமி நினைவை போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் 1986ல் பிாிக்கப்பட்ட பின்பு புதிதாக தூத்துக்குடியில் கட்டப்பட்ட கலெக்டா் அலுவலகத்திற்கு கே.வி.கே சாமி பெயரை அப்போதைய முதலமைச்சா் கலைஞா் சூட்டி புகழாரம் சோ்த்தாா். அந்தோணியாா் கோவில் அருகில் இருந்த கே.வி.கே. சாமி சிலை மீண்டும் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் புதுப்பிக்கப்பட்டு புதிய கே.வி.கே. சாமி சிலை 22.10.2023ல் திறக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது 70வது நினைவு நாளையொட்டி கே.வி.கே.சாமி சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை செய்தாா்.


நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மண்டலத்தலைவா் வக்கீல் பாலகுருசுவாமி, வட்டச்செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ்மகாராஜா, கவுன்சிலா் பேபி ஏஞ்சலின், மாநகராட்சி ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க தலைவா் மாடசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமாா், எஸ்ஜே.சுமன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *