பாஜக ஆட்சிசெய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை, திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசியதாவது; “பாஜக ஆட்சிசெய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது. கலவரம் குறித்து கவலைப்படாமல் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்கிறார். மணிப்பூரில் சனாதான ஆட்சி நடைபெறுவதால் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். நாடாளுமன்றத்திற்கே வராமல் ஊடகங்களை சந்திக்கும் பிரதமராக பிரதமர் மோடி உள்ளார். மகளிர் மீது அக்கறை உள்ள அனைவரும் மணிப்பூர் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *