எஸ். செல்வகுமார் செய்தியாளர்

சீர்காழியில் சாலையோரத்தில் கொத்தனார் மர்ம சாவு. போலீஸார் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்தார். அவரது கையில் நைலான் கயிறு இறுக்க கட்டப்பட்டு இருந்தது. மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் உடலை சீர்காழி போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி னர்.

தொடர் விசாரணையில் மர்மமான முறையில் இறந்தவர் விவரம் தெரிந்தது. அவர்

மயிலாடுதுறை,சீனுவாசபுரம்,திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த
முருகன்(50) என்பதும்,கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இவர் சம்பவத்திற்கு முதல் நாள் செம்பனார் கோயில் அருகில் கீழையூர் பகுதியில் கட்டுமான வேலை செய்து வந்ததும் பின்னர் எவ்வாறு சீர்காழி வந்தார் எப்படி இறந்தார் என்பதும் மர்மமாக உள்ளது.
கொலை செய்யப்பட்டு இறந்திருப்பாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் .
நாகப்பட்டினத்தில் இருந்து மோப்ப நாய் துலிப் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் விசாரணை நடந்தது. மோப்பநாய் மோப்பம் பிடித்து அந்த இடத்திலிருந்து சில மீட்டர் தூரம் ஓடி நின்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *