கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு செய்த சாதனைகளை எடுத்துக்கூறி பொள்ளாச்சியைச் சேர்ந்த 73 வயதுடைய கோயா சுப்பிரமணியம் என்பவர் சிறிய ஒளிபெருக்கி மூலம் பேசி முன்னதாக தண்டூரா போட்டு தெருமுனைப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்

நடை தளர்ந்த நிலையிலும் அதிமுகவின் சாதனைகளால் தமிழக மக்கள் அடைந்த பயன்களை விளக்கிக்கூறி எடப்பாடி யார் தலைமையில் நடைபெறும் மதுரை மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்தார்

மேலும் அவர் கூறும்போது மறைந்த புரட்சித்தலைவி அம்மாவின் தீவிர ரசிகர் என்றும் அதன் வழியில் செயல்படும் எடப்பாடி யாரின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமையவேண்டும் என்றும் கோவை மாவட்டத்தில் மீண்டும் வளர்ச்சிப்பணிகள் நடைபெற முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக வரவேண்டும், தமிழக மக்கள் பயனடைய வேண்டும் என்றும் அதற்க்கான தெருமுனைப் பிரச்சாரத்தில் தான் முழுமனதுடன் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார் தளர்ந்த நடையில் இவர் செய்து வரும் வினோதமான தெருமுனைப் பிரச்சாரம் பொதுமக்களை திரும்பிப்பார்க்கச் செய்துள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *