தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினர்.துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன்,
செயல் அலுவலர் ஆள வந்தார் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள் துணை மேயர்கள் நகரமன்ற,பேரூராட்சி, தலைவர்கள்,துணைத் தலைவர்களுக்கு மாதந்தோறும் மதிப்புதியும் வழங்க அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது,தாமரை குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வசதி சாலை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட – மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன்,வார்டு உறுப்பினர்கள் வசந்தா,கோமதி,
முருகன், பாண்டி, மைதிலி, சாந்தி, ராஜேந்திரன்,ஜாகிர் உசேன்,கவிதா, தேவகி, முத்துலட்சுமி, முனியம்மாள் உள்ளிட்ட பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *