வலங்கைமான் அருகே பாடகச்சேரி மகான் ஸ்ரீலஸ்ரீ பைரவ சித்தர் இராமலிங்க சுவாமிகள் ஆலயத்தில் பெளர்ணமி
பூஜை, அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி கிராமத்தில் உள்ள மகான் ஸ்ரீலஸ்ரீ பைரவ
சித்தர் இராமலிங்க சுவாமிகள் ஆலயத்தில் ஆவணி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு மாலை 6- மணிக்கு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட உதவி கலெக்டர் உதயகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில்
ஏராளமான பக்தர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பாடகச்சேரி கிராமவாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *