வலங்கைமான் அருகே உள்ள அரித்துவார மங்கலத்தில் அயோடின் பற்றாக்குறை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக அயோடின் பற்றாக்குறை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சௌமியா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் கோபு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக் ராஜா, அரவிந்தன், சதீஷ்குமார் மற்றும் மருந்தாளுநர் நிவேந்திரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் செவிலியர்கள் கலையரசி, ஜெயலட்சுமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்களுக்கு அயோடின் உப்பு பயன்பாடு குறித்தும் அதன் நன்மைகள் பற்றியும், அயோடின் இல்லாத உப்பை பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விரைவாக எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் அயோடின் உப்பு பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை முறைகள் பற்றியும் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.