திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அனைத்து நாட்களிலும ஸ்ரீஅம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தார். பதினோராம் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீ அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை வலங்கைமான் எஸ். கருப்பையா கொத்தனார் குமாரர்கள்&பேரன்கள் செய்திருந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலகர் ஆ. ரமேஷ், தக்கார் /ஆய்வர் எஸ். தமிழ்மணி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.