ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ . பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில், அக்டோபர் -2023 மாத இயல்பான மழையளவு 205.65 மி.மீ. ஆகும். நடப்பாண்டில் அக்டோபர் மாதத்தில் 39.11 மி.மீ மழை பெறப்பட்டது. 25.10.2023 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.38 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4334 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 503. கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

2023-24-ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் 36,914 ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,53,808 ஹெக்டேரிலும், கோடை சாகுபடி 9,742 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 2,00,464 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதில் குறுவை பருவத்தில் 19,681 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 41,101 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 9,311 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 70,093 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் 21,645.2 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 17,454 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 10,194.5 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 49,293.65 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தாளடி பருவத்தில் 4955 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 3,493 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 808 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 9256 ஹெக்டேரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 253 ஹெக்டேரில் சம்பா,தாளடி சாகுபடிக்கு தேவையான நாற்றாங்கால் இருப்பில் உள்ளது.
2023-2024ஆம் ஆண்டில் உளுந்து 36,700 ஹெக்டேரிலும், பச்சைப்பயறு 50,000 ஹெக்டேரிலும்; ஆக மொத்தம் 86,700 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், காரீப் பருவத்தில் 762 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும், ராபி பருவத்தில் 29 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.

2023-2024ஆம் ஆண்டில் நிலக்கடலை 4,480 ஹெக்டேரிலும், எள் 2,530 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 84 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடியும், 88 ஹெக்டேரில் எள் சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2023-2024ஆம் ஆண்டில் பருத்தி 14,000 ஹெக்டேரிலும், கரும்பு 120 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், 85 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதலில் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் என்று துவங்கி தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவித் தொகையாக விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000-ம் வீதம் ஆண்டுக்கு ரூ.அறாயிரம் என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி மாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் இதுவரை 14 தவணைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 15-வது தவணைத் தொகை வரும் மாதத்தில் விடுவிக்கப்படவுள்ளது. எனவே, அடுத்த தவணை பி.எம் கிஷான் உதவித் தொகை பெற நமுலுஊ-யை பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 15-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணை வழங்கப்படமாட்டாது

எனவே, இந்த திட்டத்தின்படி, பதிவு செய்து பயன்பெற தகுதியான பயனாளிகள் அனைவரும் பெயர் மற்றும் ஆதார் விபரங்களை மத்திய அரசின் பி.எம் கிஷான் இணைய வாயிலாக விவசாயிகள் நேரடியாக ஆதார் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் அல்லது பி.எம் கிஷான் திட்ட பயனாளிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரிடையாக ஆதார் விபரங்களை எடுத்துச் சென்று கைரேகை வைத்து பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்து கொண்டு பயன்பெறவேண்டும்.

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மூலமாக பி.எம்.கிஷான் செயலி மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.திருவாரூர் மாவட்டத்தில் இ 1இ956 பயனாளிகள் தங்களது பயனாளிகள் ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். எனவே, அனைத்து பி.எம் கிஷான் திட்ட பயனாளிகள் தங்களது ஆதார் விபரங்களை மேற்கண்ட வழிமுறையில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே அடுத்த தவணை பி.எம் கிஷான் உதவித்தெகை கிடைக்கும்.

மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள. வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் அனைவரும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வேளாண்மைதுறை இணை இயக்குநர் (பொறுப்பு) லட்சுமி காந்தன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விவசாயம் ஏழுமலை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கா.சித்ரா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் செயற்பொறியாளர் (வெண்ணாறு வடிநிலக்கோட்டம்) ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு உயர்அலுவலர்கள் விவசாய. சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *