ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

போட்டியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது

கடந்தாண்டு முதல் தொடங்கப்பட்ட கலைத்திருவிழாவானது இந்தாண்டும் தொடர்ந்து நடைபெறுகிறது. கல்வித்துறை என்பது மாணவ மாணவியர்களுக்கு கல்வி கற்க வைப்பது, தேர்வில் வெற்றி          பெற செய்து உயர்நிலைகளுக்கு அவர்களை அழைத்து செல்வது என இன்றி பள்ளிகல்வித்துறையின் பலவித புது முயற்சிகளில் கலை திருவிழா குறிப்பிடத்தக்கது கலைத்திருவிழா மூலம் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்வேறு திறன்கள் வெளிப்படுகின்றன.  இது போன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்                   வெற்றி   பெற முடியவில்லையெனில் வருத்தம் அடையாமல் இந்த முறை நீங்கள் செய்த.  தவறினை திருத்திக்கொண்டு அடுத்த முறை வெற்றி பெற உழைக்க வேண்டும்      இந்தாண்டும்  மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் திருவாரூர் மாவட்டத்தினை சார்ந்த மாணவ, மாணவியர்கள்  வெற்றி பெற வாழ்த்துக்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார். 

நிகழ்வில் திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில் திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் முதன்மை அலுவலர் அ.புகழேந்தி உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் இரா . சங்கர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) இ.மாதவன் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சௌந்தர்ராஜன் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) மாயகிருஷ்ணன் உள்ளிட்ட. ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *