வலங்கைமானில் பேரூராட்சி சார்பில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில், ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி, அரசு, தனியார் மருத்துவமனை வளாகங்களில் அதனை சுற்றியுள்ள இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாக கூடிய டயர்கள், உபயோகமற்ற தண்ணீர் தேங்க கூடிய பொருட்கள் அகற்றும் பணி நடைபெற்றது.
ஆலங்குடி, அரித்துவாரமங்கலம், ஆவூர், இனாம்கிளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இப்பணியில் வலங்கைமான் அரசு மருத்துவமனை முதன்மை குடிமுறை மருத்துவர் சித்ரா தொடங்கி வைத்தார், இதில் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், ஹரித்துவாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் கோபு, சுகாதார ஆய்வாளர் பாலாஜி, வலங்கைமான் களப்பணி உதவியாளர் விஜயகாந்த், களப்பணியாளர் குமார், வலங்கைமான் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் அம்பேத்குமார், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.