வால்பாறையில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மண்டல திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.தமிழ்மணி தலைமையில் வால்பாறையிலுள்ள குட்லக் தனியார் அரங்கில் நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் முன்னதாக திமுகவின் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் அனைவரையும் வரவேற்று பேசினார்

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் கலைஞர் மகளீர் உரிமைத் தொகை வழங்கி மகளீரின் நலன் காத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தென்னை நார் உற்பத்தி தொழில் நலிவடைந்து உற்பத்தியும், ஏற்றுமதியும் குறைந்த காரணத்தினால் தேங்காய் மட்டையை கொள்முதல் செய்வதில்லை எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேங்காய் விலையை அதிகப்படுத்திட மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 108 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டுமெனவும், வருடம் முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்ய தற்போது மத்திய அரசு வழங்கிவரும் நிதியை மூன்று மடங்காக உயர்த்தி தென்னை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று ஆளும் மத்திய அரசை திமுக மாநில விவசாய அணி வலியுறுத்துகிறது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்தில் நிர்வாகிகள் தர்மலிங்கம், குறிச்சி சிவக்குமார்,கல்லிப்பட்டி மணி, மதுரை கணேஷ்,அப்துல் அமீது, டேம் வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிக்கடை கணேசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜேபிஆர் என்ற பாஸ்கர், வால்பாறை நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் டி.எஸ்.புனிதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *