வலங்கைமான் மாரியம்மன் கோயில் அருகே வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மும்முரம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாரியம்மன் கோயில் பகுதியில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் அருகருகே இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது,

வேகத்தடை மீது வெள்ளை கோடு இல்லாதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள சாலையில் வரதராஜன் பேட்டை மகாமாரியம்மன் கோயில் அருகே இரண்டு வேகத்தடைகள் உள்ளன, இங்கே வேகத்தடை உள்ளது நிர்வாக செல்லவும் என நெடுஞ்சாலை துறையினர் அறிவிப்பு பலகை எதுவும் வைக்கவில்லை, மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வேகத்தடைகள் மீது அடிக்கப்பட்ட வெள்ளை நிறக் கோடு மங்கிய நிலையில், அங்கு வேகத்தடை இருப்பதை வெளியூர்களில் இருந்து வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனிக்க மறந்து அடிக்கடி சிறு விபத்துகளில் சிக்குகின்றனர்,

இதே போல வலங்கைமான்- பாபநாசம் சாலையில் விருப்பாச்சிபுரம் கடைவீதி பகுதியில் உள்ள வேகத்தடையிலும் வெள்ளை வர்ணம் பூச வேண்டும், நெடுஞ்சாலை துறையினர் மேற்கண்ட பகுதிகளில் உள்ள வேக தடையிலும் வெள்ளை வர்ணங்கள் பூச வேண்டும்.நெடுஞ்சாலை துறையினர் மேற்கண்ட பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ணம் பூசுதல், இரவில் ஒளிரும் ஒளிப்பான்ககளை அமைத்தல், வேகத்தடை உள்ளது என்ற அறிவிப்பு பலகை வைத்தல் போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

இதன் எதிரொலியாக வேகத்தடைகள் மீது வெள்ளை கோடுகள் போடும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர். முதல் கட்டமாக நேற்று மாரியம்மன் கோவில் பகுதியில் அருகே உள்ள வேகத்தடையில் வெள்ளை கோடுகள் வர்ணம் பூசப்பட்டது, மீதமுள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *