கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு மாநிலக் கல்வியியல் அடைவு ஆய்வு கள ஆய்வாளர்களுக்கான பயிற்சி…..
மதுரை, நாகமலை புதுக்கோட்டை நாடார் மகாஜன சங்கம் வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாநிலக் கல்வியியல் அடைவு ஆய்வு கள ஆய்வாளர்களுக்கான பயிற்சி,
மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
இப்பயிற்சியின் மூலம் மாணவர்கள் கள ஆய்வின் போது திரட்ட வேண்டிய கோப்புகள் பற்றியும், முன்னேற்பாடுகள் பற்றியும், தெளிவாக தெரிந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் தேன்மொழி அனைவரையும் வரவேற்று பேசினார். இப்பயிற்சியினை முதுநிலை விரிவுரையாளர் வைரமுத்து ஒருங்கிணைப்பாளர் ஜெசிந்தா நவீன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இணைந்து நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.