வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழாவில், தொழில் நுட்பக் கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமை வகித்து கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார், முன்னதாக கணினிப் பொறியியல் துறை தலைவர் லதா வரவேற்றார்.

அண்ணாமலை பல்கலைக்கழக உற்பத்தியியல் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2021- 23 ஆம் ஆண்டு வரை தொழில்நுட்ப கல்வி பயின்ற 115 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்,

கல்லூரியின் முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *