கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர். க. பிரேம்குமார் தலைமை ஏற்று விழாவை தொடக்கி வைத்தார்.

இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலைநாகராஜ் அவர்கள் முன்னிலையில், வகித்தனர் இதில் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி ராமமூர்த்தி கருப்பண்ணன் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர் தட்ரள்ளி, பெரியண்ணன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அகரம் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டியை வழங்கினார்கள்.

இவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, துணைத் தலைவர் மணிமேகலை, உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் நடராஜன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *