சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 7 தாசில்தார் பணியிட மாற்றம், 4 முதுநிலை ஆர்.ஐ.,க்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு,36 ஆர்.ஐ.,க்கள் மாற்றம் செய்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.சிவகங்கை தாசில்தார் (டாஸ்மாக்) ஏ.தமிழரசன்,தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) தனி தாசில்தாராகவும், தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) தனி தாசில்தார் எஸ்.என்.,விஜயகுமார், திருப்புவனம் தாசில்தாராகவும், திருப்புவனம் தாசில்தார் எம்.கண்ணன், காரைக்குடி (மனை வாடகை வருவாய்) தனி தாசில்தாராகவும், சிங்கம்புணரி தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) சி.ஆனந்த், திருப்புத்துார் தாசில்தாராகவும், திருப்புத்துார் தாசில்தார் டி.வெங்கடேஷ், திருப்புத்துார் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், சிவகங்கை கோட்டாட்சியர் பி.ஏ., ஆர்.ஜெயந்தி, சிவகங்கை (மனை வாடகை பிரிவு) தனி தாசில்தாராகவும், சிவகங்கை தமிழ்நாடு கேபிள் நிறுவனம் துணை மேலாளர் எஸ்.சேதுநம்பு, சிவகங்கை தேசிய நெடுஞ்சாலை – 226 (நில எடுப்பு) தனி தாசில்தாராக மாற்றப்பட்டனர்.
இது தவிர முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஆர்.பழனிக்குமார், ஏ.மருதுபாண்டியன், பி.நாகேந்திர முருகன், ஜி.பாலசுப்பிரமணியன் ஆகிய 4 பேர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் ஒட்டுமொத்தமாக 36 வருவாய் ஆய்வாளர்களை மாற்றம் செய்தும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.