பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் சுடுக்காடு இருக்கும் இடத்தில் குப்பைகளை கொட்டி நோய் தொற்று அபாயத்தை ஏற்படுத்தி மாற்றியமைக்காமல் அலட்சியம் காட்டும் திருவலஞ்சுழி ஊராட்சி நிர்வாகம் குப்பைகிடங்கை மாற்றியமைக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கும்பகோணம் ஒன்றியம் திருவலஞ்சுழி ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் (திருவலஞ்சுழி- மணப்படையூர்) சுடுகாட்டில் ஊராட்சியின் கழிவு குப்பைகளை திருவலஞ்சுழி ஊராட்சி நிர்வாகம் சுடுகாட்டு இடத்தில் கொட்டி வருகிறது இது தொடர்பாக திருவலஞ்சுழி ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் மீண்டும் அதிக அளவில் சுடுகாட்டில் குப்பைகளை கொட்டி வருகின்றனர் .

இதை உடனடியாக மாற்று இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு திருவலஞ்சுழி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களோடு சிபி எம் எல் (மக்கள் விடுதலை) இணைந்து மிகபெரிய போராட்டத்தை நடத்துவதற்கு தயாராக உள்ளனர் என சிபி எம் எல் மக்கள் விடுதலை கட்சியின் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *