பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அண்ணா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம் அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு 100 மூட்டை அரிசியில் சாதம் சமைத்து லிங்கத்தின் மேல் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீப ஆராதனை நடைபெற்றது
இந்த அன்னாபிஷேகம் கடந்த 38 ஆண்டுகளாகஅறநிலைய துறையினர் மற்றும் காஞ்சி சங்கர மட கமிட்டியினர் இணைந்து அண்ணாபிஷேகத்தை முன் நின்று வருடம் தோறும் நடத்தி வருகின்றனர்
முனனதாக அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கணக்க விநாயகருக்கு அபிஷேகமும் பிரகன்னநாயகிக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
அன்னாபிஷேகத்தின் நிறைவாக பிரகதீஸ்வரர் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது இதில்ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றுச் சென்றனர்.