வலங்கைமான் பகுதியில் சிவன் ஆலயங்களில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணா அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகமும், அம்மனுக்கு பழ வகைகள் அலங்காரமும், தீபாரணையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர் அதேபோல் வலங்கைமான் லாயம் காந்திநகர் கோல்டன் சிட்டியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ கருந்தார் குழலி உடனாகிய ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதம், அன்னதானமும் வழங்கப்பட்டது,

நிகழ்ச்சியை காந்திநகர் கோல்டன் சிட்டி வாசிகள் சிறப்பாக செய்திருந்தனர், இதேபோல் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஸ்ரீலஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது,

நிகழ்ச்சியை கே. ஜெயலட்சுமி கண்ணையா வாண்டையார் குடும்பத்தினர் மற்றும் பாடகச்சேரிமகான் ஸ்ரீலஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதே போல வலங்கைமான் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்திலும், ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *