வலங்கைமானில் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்ட அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 60- வது வைர விழா ஆண்டு வலங்கைமான் வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டத் தலைவர் சத்திய பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது,

வட்ட செயலாளர்ஜெயமோகன் வரவேற்றார், மாவட்ட பொருளாளர் ரவி துவக்கரையாற்றினார், மாவட்ட இணை செயலாளர் சுகுமார், மத்திய செயற்குழு உறுப்பினர் விக்னேஸ்வரர் முன்னிலை வகித்தனர், மாவட்டத் தலைவர் மகேஷ், மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர்,

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு துணை வட்டாட்சியர் நிலையில் புதிய பணியிடங்கள் வழங்க வேண்டும், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொருளாளர் சோமசுந்தரம் நிறைவுறையாற்றினார், அன்புராஜ் நன்றி கூறினார்,நிகழ்ச்சியில் தோழமை சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *