வலங்கைமானின் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கத்தின் 11- ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தனியார் திருமண கூடத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கத்தின் 11-ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் கொடியினை IESL தமிழ்நாடு அனைவரும் ஆல் இந்தியா துணைத் தலைவருமான COL. C.T. அரசு ஏற்றி வைத்தார், குத்துவிளக்கினை மகளிர் குழுவினர் ஏற்றி வைத்தனர்,

சங்கத் தலைவர் Jwo.P. சண்முகவேலு முன்னிலை வகித்தார், சங்கத் துணைத் தலைவர்Nb/Sup. K. கணேசன் வரவேற்று பேசினார், செயற்குழு உறுப்பினர் ஜி. சத்திய மூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், சங்க செயலாளர் D.செல்வத்துரை ஆண்டு அறிக்கையைவாசித்தார்.

சங்க பொருளாளர் G.E.தியாகராஜன் ஆண்டு கணக்கு அறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர்கள், சங்க நிர்வாகிகள் மூத்த உறுப்பினர்களை கௌரவித்தனர். கும்பகோணம் CDR. N. மூர்த்தி, maj.K. கணேசன், தஞ்சாவூர்maj.S. பாலகிருஷ்ணன், மன்னார்குடிCapt.R. விஜயராகவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், IESL தமிழ்நாடு தலைவரும், ஆல் இந்தியா துணைத் தலைவருமான COL. C.T. அரசு சிறப்புரையாற்றினார், HON.L.T.G. ராஜா ராமன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *