வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் தபால் நிலையங்கள் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடவாசல் ஒன்றியம் வடக்கு சார்பில் மருதவாஞ்சேரி தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சந்திரஹாசன் தலைமை வகித்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர்ரவிச்சந்திரன் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராஜதுரை தலைவர் ராஜேந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் பங்கேற்றனர்.

அதேபோல வலங்கைமான் தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் பாலையா தலைமை வகித்தார், மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் கண்டன உரையாற்றினார், ஒன்றியசெயலாளர்ராதா மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *