திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஏற்பாட்டில் உருளையன்பேட்டை தொகுதி மக்களுக்கு காலண்டர் மற்றும் சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி – சிவா எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்.
திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் அவர்களின் ஏற்பாட்டில் உருளையன்பேட்டை தொகுதி மக்களுக்கான தினசரி காலண்டர் மற்றும் சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி கல்வே பங்களாவில் அமைந்துள்ள அருள்மிகு அரசமரத்தடி விநாயகர் கோவிலில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் மாநில கழக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்துக்கொண்டு
காலண்டர் மற்றும் சர்க்கரையை தொகுதி மக்களுக்கு வீடு வீடாக வழங்கி துவக்கிவைத்தார். அப்போது திமுக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.