அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா
மொழியை அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில்

சிறுபான்மை மொழி தேர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரில் சந்திப்பு.

ஒமியட் என்னும் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்தனர்.

அப்போது சிறுபான்மை பள்ளிக்கூடங்கள் தொடர்பான சிறுபான்மை மொழி தேர்வுகள், சிறுபான்மை சான்றிதழ் வழங்குவது, சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன் வைத்தனர்.

அப்போது தங்களது ஆக்கபூர்வமான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவததாக அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யா மொழி உறுதி அளித்தார்.

சந்திப்பின்போது பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, ஒமியத் அமைப்பின் இணை செயலாளர் பேராசிரியர் கமால் அப்துல் நாசர், பொருளாளர் முஹம்மது கத்தீப், நையீம், இக்பால் ஷா,
பள்ளிக்கல்வி இயக்குனர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *