பாபநாசம் அருகே மருத்துவ குணம் கொண்ட இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பாரம்பரிய நெல் விவசாயி சந்துரு…

புற்றுநோய் மற்றும் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் கருப்புகவுனி நெல் விவசாயத்தை அரசு ஊக்கப்படுத்த வேண்டி, விவசாயிகள் கோரிக்கை..

தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே சாலபோகம் பகுதியில் பாரம்பரிய கருப்புகவுனி நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நெல் ரகம் 6-அடி உயரம் வளரும் தன்மையுடையது. 5 மாதத்தில் விளையும் இந்த நெல்ரகம் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே விளைகிறது. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், பாரம்பரிய நெல் ரகமான கருப்புகவுனி ரகத்தை இயற்கை வேளாண் முறையில் கடந்த 5 ஆண்டுகளாக விளைவித்து வருவதாகவும் இதற்கு கள்ளபுண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, பஞ்சகாவியம், மீன்அமினோஅமிலம், ஆகியவற்றை சொந்தமாக தயார் செய்து உரமாக இட்டு வருவதாகவும், இந்த நெல்லில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து அதிகம். தேவையான அளவு மாவுச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது. மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யும். இந்த வகை அரிசியை கஞ்சி வைத்து அருந்துவதன் மூலம் இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோயை கட்டுப் படுத்துவதுடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மருத்துவ குணம் உண்டு. இந்த கருப்புகவுனி அரிசியை எந்த லாப நோக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவும், தமிழக அரசு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய கருப்பு கவுனி நெல்லை சாகுபடி செய்வதற்க்கு விவசாயிகளை ஊக்கப்படுத்தி, ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *