திருவெற்றியூர்
மணலி புதுநகர், அற்புதக் குழந்தை இயேசு கோவில், பிரசித்தி பெற்றது இக்கோவிலின், 44 ம் ஆண்டு பெருவிழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, ஆர்.ஏ. புரம் – நற்றுணை அன்னை ஆலயம் பங்குத்தந்தை போஸ்கோ தலைமையில் திருக்கொடி மந்திரிக்கப்பட்டு, சாம்பிராணி தூபமிட்டு, பக்தி முழக்கங்களுடன், திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
இந்தக் குழந்தை இயேசு பெருவிழா
பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய நிகழ்வான, தேர்த்திருவிழா, 6ம் தேதி, மயிலை மறை மாவட்ட மேய்ப்பு பணி நிலைய இயக்குனர் ஜெயக்குமார் தலைமையில், நடக்கிறது.
தொடர்ந்து, 7ம் தேதி, ‘இருளகற்றும் ஒளியாக அற்புத குழந்தை இயேசு’ என்ற தலைப்பில் ஆசீர்வாத திருவிழா நடைபெற உள்ளது.
இந்த, ஆண்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை, திருத்தல பங்குதந்தை தங்க குமார் மற்றும் பங்கு மக்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பெருவிழாவில் பங்கு மக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பொதுமக்கள் என பல தரப்பு மக்கள் வருவதால் இப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது