தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் பங்கேற்பு..
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி பகுதியில் உள்ள சிறு விளையாட்டு மைதானத்தில் இன்று திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி அனைவரையும் வரவேற்றார்.
திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், மாவட்ட சேர்மன் சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ
வேலு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானு, திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, நகர்மன்ற தலைவர்கள் சங்கிதா வெங்கடேசன் (திருப்பத்தூர்) காவியா விக்டர் (ஜோலார்பேட்டை) ஒன்றிய சேர்மன்கள் திருமதி திருமுருகன் ( கந்திலி) சத்தியா சதிஷ் குமார் ( ஜோலார்பேட்டை) வெண்மதி ( நாட்டறம்பள்ளி) மற்றும் அரசு அதிகாரிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.. முடிவில் முடக்கியல் மருத்துவர் இனியன் நன்றி கூறினார்..