ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவு திருவாரூரில் அனைத்து கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் தேமுதிக நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு திருவாரூரில் அனைத்து கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது
நிகழ்விற்கு தேமுதிக திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறியாளர் எம் சண்முகராஜ் முன்னாள் மாவட்ட செயலாளர் என் முத்தையா தலைமை வகித்தனர் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே துவங்கிய அமைதி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அமைதி ஊர்வலம் ஆக சென்று கீழ வீதியில் நிறைவடைந்தது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் டிவி மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினர்
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் திமுகவை சேர்ந்த மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே கோபால் அண்ணா திமுகவைச் சேர்ந்த கழக அமைப்பு செயலாளர் மன்னார்குடி சிவா ராஜமாணிக்கம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ் எம் பி துரைவேலன் தாமக மாவட்ட செயலாளர் குடவாசல் எஸ் தினகரன் உள்பட. சி பி ஐ .சி பி எம். பாஜக . விசிக நாம் தமிழர் பாமக மதிமுக. புதிய தமிழகம் கட்சி த ம மு க. மனிதநேய மக்கள் கட்சி எஸ் டி பி ஐ உள்ளிட்ட கட்சியை சேர்ந்த. மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் மேலும் வர்த்தகர் சங்க தலைவர் சிஏ பாலு மற்றும் கட்டட பொறியாளர் சங்கம் ஸ்டுடியோ வீடியோ உரிமையாளர் நல சங்கம் ரோட்டரி கிளப் ஆப் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று மறைந்த தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்
தேமுதிக கட்சியின் மாவட்ட நகர ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர் முன்னதாக தேமுதிக திருவாரூர் நகர செயலாளர் வழக்கறிஞர் சதீஷ் என்ற சதீஷ்குமார் வரவேற்றார் நிறைவாக கட்சியின் திருவாரூர் ஒன்றிய செயலாளர் வி அருள் நன்றி கூறினார்