திருவொற்றியூர்

பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என எம்.எல்.ஏ சங்கர் , சென்னை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். எண்ணூர் பகுதியில் கோரமண்டல் ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த 26ம்‌ தேதி அன்று, இந்த தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து பொதுமக்கள் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தற்காலிகமாக தொழிற்சாலையை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறபித்தது. தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கடந்த 27ம்‌ தேதி முதல் பெரிய மீனவ கிராமம் அருகில், தொழிற்சாலை வாயில் முன்பு அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ,33 கிராம நலச்சங்கங்கள் மற்றும் எண்ணூர் வியாபாரியக்ள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த போராட்டம் ஆட்சியாளர்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக , திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி சங்கர் , சென்னை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து, கோரம்ண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தினார்.

பின் எம்.எல்.ஏ சங்கர் கூறும்போது; பொதுமக்களின் போராட்ட உணர்வுகளை ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்வதற்காக ,அவர்களால் உருவாக்கப்பட்ட எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் , மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து, கோரமண்டல் தொழிற்சாலையை மூட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *