பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தனது சொந்த செலவில் உருவாக்கப்பட்ட செயின்ட் மேரிஸ் பள்ளிக்கூடம் மற்றும் சொத்துக்களை மீட்டு தர வலியுறுத்தி பள்ளியின் முன்பு முதியவர் உண்ணாவிரதம்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பள்ளியை யார் நடத்துவது என்பது குறித்து கபிரியேல் லூர்துதாஸ் என்பவருக்கும், அவரது மகன்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே பள்ளியை தனது மகன்களிடமிருந்து மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி கபிரியேல்
லூர்தூதாஸ் தற்போது பள்ளியின் முன்பாக திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கபிரியேல் லூர்தாசின் மனைவியை அவரது மகன்கள் இரண்டு வருடமாக பிரித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *