சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேலு நாச்சியார் நினைவு மண்டபத்தில் அரசு சார்பில் அவரது சிலைக்கு. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர கே ஆர் பெரிய கருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன்:

தமிழகத்தில் விடுதலைக்காக போராடியவர்கள், தமிழின் பெருமையை உலகுக்கு வெளி கொண்டு வந்த அறிஞர்களுக்கு, திமுக அரசு நினைவு மண்டபங்களையும், சிலையும் அமைத்து வருகிறது. தமிழ் தலைவர்களை பெருமைப்படுத்துவதில், பெரியார், அண்ணாவுக்கு இணையாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும்,சிவகங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் வீரத்தாய் குயிலிக்கு முழு உருவ சிலை துவங்கும் பணி இன்னும் ஒரு சிறு தினங்களில் துவங்க உள்ளது என்றும், இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை திட்டம் தொகை பொங்களுக்கு முன்னார் வரும் 13ம் தேதி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும்,

பொங்கல் பரிசு பொருளில் வழங்கப்படும் கரும்பினை, கொள்முதல் செய்வதற்கு ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அதனை சிறப்பாக மேற்கொள்வார்கள் என அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *